Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 52 லட்சத்தை தாண்டிய கொரோனா தொற்று எண்ணிக்கை

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (10:06 IST)
இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 லட்சத்தை தாண்டியுள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் ஒரே நாளில் 96,423 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
 
எனவே, இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 51,18,254 லிருந்து 52,14,677 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரொனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 40.25 லட்சத்திலிருந்து 41.12 லட்சமாக உயர்ந்துள்ளது. அதோடு உயிரிழந்தோர் எண்ணிக்கை 83,198 லிருந்து 84,372 ஆக அதிகரிப்பு. 
 
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10.17 லட்சம் பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க்ப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஒரே நாளில் 96,423 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 87,472 பேர் குணமடைந்துள்ளனர், 1,174 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

டெல்லிக்கு வந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

தமிழ்நாட்டுல இருக்கேன்! முடிஞ்சா இங்க வாங்க! சிவசேனா தொண்டர்களுக்கு சவால் விட்ட குணால் கம்ரா!

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments