Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

51 லட்சத்தை தாண்டியது கொரோனா; 6 கோடி மாதிரிகள் பரிசோதனை

51 லட்சத்தை தாண்டியது கொரோனா; 6 கோடி மாதிரிகள் பரிசோதனை
, வியாழன், 17 செப்டம்பர் 2020 (10:21 IST)
இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 97,894 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 51,18,253 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 1,132 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 83,198 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் 82,719 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ள நிலையில் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 40,25,079 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 10,09,976 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா முழுக்க 6 கோடி கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

12 நாள் குழந்தையை கடித்து கொன்ற வளர்ப்பு நாய்… அதிர்ச்சி செய்தி!