Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் 1,45,384 பேருக்கு கொரோனா – இந்திய நிலவரம்!

ஒரே நாளில்  1,45,384 பேருக்கு கொரோனா – இந்திய நிலவரம்!
, சனி, 10 ஏப்ரல் 2021 (10:06 IST)
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக 1 லட்சத்திற்கும் மேல் அதிகரித்து வருகிறது. 
 
ஆம், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,45,384 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,32,05,926 ஆக உயர்ந்தது. புதிதாக 794 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை  1,68,436 ஆக உயர்ந்தது.
 
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 77,567 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,19,90,859 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10,46,631 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பது ஏழுமலையானாக மாறிய நித்தி... வைரல் க்ளிக்ஸ்!!