Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முடிவுக்கு வரும் கொரோனா 2ஆம் அலை... இந்திய நிலவரம் !

முடிவுக்கு வரும் கொரோனா  2ஆம் அலை... இந்திய நிலவரம் !
, வெள்ளி, 16 ஜூலை 2021 (10:01 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை குறைந்து வரும் நிலையில் தற்போது இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,949 பேரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,10,26,829 ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 542 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,12,531 ஆக உயர்ந்தது.
 
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 40,026 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,01,83,876 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,30,422 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 39,53,43,767 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கும்பகோணம் பள்ளி தீவிபத்து நினைவு நாள்: பெற்றோர்கள் இன்று அஞ்சலி!