Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் குறைய தொடங்கியது கொரோனா! குணமடைபவர்கள் அதிகரிப்பு!

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (10:17 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் 22 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டியிருந்தாலும் குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் சுகாதார துறை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 53,601 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 22,68,676 ஆக உள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 871 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 45,257 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இதுவரை 15,83,490 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில் 6,39,929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கொரோனா பாதிப்புகள் இந்தியாவில் மிக விரைவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments