Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3 ஆயிரத்தை தாண்டிய தினசரி பலி எண்ணிக்கை! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

3 ஆயிரத்தை தாண்டிய தினசரி பலி எண்ணிக்கை! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
, ஞாயிறு, 2 மே 2021 (10:33 IST)
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் 3 லட்சத்தை தாண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3,92,488 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,95,57,547 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 3,689 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  2,15,542 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,59,92,271 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 33,49,644 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதும் 15,68,16,031 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஹா.. ஜெயிச்சிடுவோம் போல இருக்கே..! – வாக்கு எண்ணும் மையம் விரைந்த கமல்ஹாசன், உதயநிதி..!