Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”அப்பளம் சாப்பிட்டா கொரோனா வராது”ன்னு சொன்ன அமைச்சருக்கு கொரோனா!

Webdunia
ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (10:51 IST)
சமீபத்தில் அப்பளம் சாப்பிட்டால் கொரோனா வராது என பாபிஜி பப்பட்-ஐ ப்ரோமோட் செய்த மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவுக்கு மருந்தாக முன்வைக்க கூடிய பொருட்கள் குறித்தும் விமர்சனம் எழுந்துள்ளது,சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் “பாபிஜி அப்பளம்” கொரோனா எதிர்ப்பு சக்தியை அளிப்பதாகவும், தற்சார்பு பொருளாதாரத்தில் உருவான பொருளை மக்கள் ஊக்குவிக்க வேண்டும் எனவும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இது சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் தற்போது அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் கொரோனா பாதிப்பினால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலாவதாக சோதனை செய்த போது நெகட்டிவ் என முடிவுகள் வந்ததாகவும், இரண்டாவது முறையாக பாஸிட்டிவ் வந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

சாமிக்கு ஆரத்தி எடுப்பதில் பூசாரிகளுக்குள் சண்டை.. கத்திக்குத்தால் ஒருவர் கொலை..!

கோடையில் மின்வெட்டு வராது.. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிமொழி..!

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments