கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
	
	
	கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டில் ஒரு நாள் பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 39,726 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,15,13,945 ஆக உயர்ந்துள்ளது.
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	ஒரே நாளில் 154 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,59,370 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,10,83,679 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 2,71,282 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.