Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 43 ஆக உயர்வு…

Arun Prasath
திங்கள், 9 மார்ச் 2020 (17:47 IST)
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கேரளாவில் நேற்று 5 பேருக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஜம்முவில் ஒருவருக்கும், உத்தர பிரதேசத்தில் ஒருவருக்கும், டெல்லியில் மூன்றாவதாக ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே போல் இத்தாலியில் இருந்து எர்ணாகுளத்திற்கு வந்த தம்பதியரின் 3 வயது குழந்தைக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக இத்தாலிய பயணிகள் 16 பேருக்கு கொரோனா உள்ளது கண்டறியப்பட்டது. மேலும் கேரளாவில் 3 பேர் குணமடைந்த நிலையில், 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கும் சென்னையை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments