Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா 3வது அலை இந்த மாத இறுதியில் உச்சம் தொடும்

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (18:36 IST)
கொரோனா 3வது அலை இந்த மாத இறுதியில் உச்சம் தொடும் என ஐஐடி கான்பூர் பேராசிரியர் மனிந்திர அகர்வால் பேட்டி. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் மீண்டும் மிக வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,57,07,727 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா 3வது அலை இந்த மாத இறுதியில் உச்சம் தொடும் என ஐஐடி கான்பூர் பேராசிரியர் மனிந்திர அகர்வால் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, நாடு முழுவதும் ஜனவரி மாதம் இறுதியில் கொரோனா பரவல் புதிய உச்சம் பெறும். 2வது அலையில் ஏற்பட்ட பாதிப்பை விட இந்த அலையில் பாதிக்கப்படுவர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதேசமயம் மார்ச் மாதம் மத்தியில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி 3வது அலை முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பசியால் அழுத குழந்தைகள்.. துள்ளத் துடிக்க கொன்ற கொடூர தாய்!

நீட் தேர்வு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளி.! முடங்கிய நாடாளுமன்றம்..!!

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை..! விஜயை புகழ்ந்து தள்ளிய சீமான்..!

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்.. உயர்நீதிமன்றம் உத்தரவு..!

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்.. மாமல்லபுரம் அருகே பரபரப்பு சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments