Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோர்பேவாக்ஸ் - தடுப்பூசியின் சிறப்பம்சங்கள் என்ன?

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (10:24 IST)
12-14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு  அறிவித்துள்ளது. 

 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்கனவே பெரியோர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியாவில் 12-14 வயதுடைய சிறுவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. 
 
12-14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு  அறிவித்துள்ளது. இந்தியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசியின் விலை ரூ.400. இந்த தடுப்பூசியின் சிறப்பம்சங்கள் குறித்த விவரம் பின்வருமாறு... 
 
1. கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புரத அடிப்படையிலான முதல் தடுப்பூசி ஆகும். 
 
2.  கோவிஷீல்டு தடுப்பூசியை விட கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி கூடுதல் எதிர்ப்பு சக்தி கொண்டது என ஆய்வில் தகவல். 
 
3. கோர்பவாக்ஸ் தடுப்பூசி, கொரோனா வைரசின் ஸ்பைக் புரோட்டீனை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 
 
4. பயனாளிகள் 28 நாட்கள் இடைவெளியில், 2 டோஸ் கோர்பவாக்ஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். 
 
5. கொரோனா வைரசுக்கு எதிராக 90 சதவீதமும், டெல்டா வகை வைரசுக்கு எதிராக 80 சதவீதமும் செயலாற்றக் கூடியது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments