ஒடிசாவில் விபத்து நடந்த இடத்தை கடந்து சென்றது சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ்..!

Webdunia
புதன், 7 ஜூன் 2023 (08:38 IST)
ஒரிசாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதிய விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் இந்த விபத்தில் 275 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. 
 
மேலும் இந்த விபத்தில் பலியான நூறுக்கும் மேற்பட்டார் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் 51 மணி நேரத்தில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் முடிவடைந்து தற்போது விபத்து நடந்த இடத்தில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று விபத்து நடந்த அதே இடத்தை கடந்து சென்றது. சென்னையில் இருந்து புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து நடந்த இடத்தில் 30 கிலோமீட்டர் வேகத்தில் சற்றுமுன் கடந்து சென்றது. 
 
வந்தே பாரத் ரயில் உள்பட சுமார் 70 ரயில்கள் மீண்டும் இந்த பாதையில் நேற்று முதல் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் பீகாரில் என்.டி.ஏ ஆட்சி.. ஜீரோவாகும் பிரசாந்த் கிஷோர்.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆச்சரியம்..!

இஸ்லாமாபாத் தாக்குதல்களுக்கு இந்தியா தான் காரணம்.. ஷெபாஸ் ஷெரிஃப் குற்றச்சாட்டு..!

புரியாமல் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி..!

ஞாயிறு அன்று தீபாவளி.. 2026 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை தினங்களின் பட்டியல்..!

விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை?.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை!..

அடுத்த கட்டுரையில்
Show comments