Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோடியாக வரும் கல்லூரி மாணவர்கள் விரட்டப்படுவார்கள்: பேருந்து நிலையத்தில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!

Webdunia
ஞாயிறு, 16 ஜூலை 2023 (08:43 IST)
ஜோடியாக வரும் கல்லூரி மாணவ மாணவிகள் விரட்டப்படுவார்கள் என பேருந்து நிலையத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்ததால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கேரளாவில் உள்ள மலப்புரம் என்ற பகுதியில் எடவண்ணா பேருந்து நிலையம் உள்ளது. இங்கே கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட பலர் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்வார்கள். 
 
இந்த நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் நேற்று திடீரென ஒரு சர்ச்சைக்குரிய போஸ்டர் வைக்கப்பட்டது. அந்த போஸ்டரில் பேருந்து நிலையத்திற்கு மாலை ஐந்து மணிக்கு மேல் ஜோடியாக வரும் கல்லூரி மாணவர்கள் மாணவிகள் உள்ளூர் வாசிகளால் அடித்து விரட்டப்படுவார்கள் என மிரட்டல் எடுக்கும் வகையில் அந்த போஸ்டர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து அதற்கு பதிலடியாக பொது இடத்தில் இது போன்ற உத்தரவு பிறப்பிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று மற்றொரு போஸ்டர் அதன் அருகிலேயே வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தியாக தீபங்களான தந்தையரை வணங்குவோம்! - அன்புமணி பதிவிற்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

ஒரு பாகிஸ்தானின் கழுதை விலை ரூ.3 லட்சம்.. சீனா வாங்குவது இதற்காக தானா?

”எனக்கு நீதி கிடைக்கும் வரை இங்கு டீ கொதிக்கும்!” - மாமனார் வீட்டிற்கு முன்னே டீ கடை வைத்து போராடும் மருமகன்!

ஈரான் - இஸ்ரேல் போரால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பா? அதிர்ச்சி தகவல்..!

"கண்டனம்" என்பதற்கு பதிலாக "காண்டம்" என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments