Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காந்தி எப்படித் தற்கொலை செய்துகொண்டார் ? – சர்ச்சையைக் கிளப்பிய பள்ளி வினாத்தாள் கேள்வி !

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (13:14 IST)
குஜராத் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றின் வினாத்தாளில் காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார் என்ற கேள்வி சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

இந்தியாவின் தேசதந்தையாக கருதப்பட்டு வரும் மகாத்மா காந்தி 1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி காந்தி கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திய வரலாற்றில் அந்நாள் கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காந்தியின் மரணம் குறித்து சர்ச்சையானக் கேள்வி ஒன்று பள்ளி வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ளது. சுபலாம் ஷாகா விகாஸ் சங்குல் என்ற அமைப்பு குஜராத்தில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் கீழ் பல பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பள்ளிகளில் ஒன்றில் கடந்த 12 ஆம் தேதி நடந்த தேர்வு ஒன்றின் வினாத்தாளில் காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்  என்ற சர்ச்சைக்குரிய கேள்வி இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து காந்திநகர் மாவட்ட தலைவர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதன் பின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments