கோட்டாவில் தொடரும் நீட் பயிற்சி மாணவர்கள் தற்கொலை

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (12:39 IST)
ராஜஸ்தான்  மாநிலம் கோட்டாவில் நீட் பயிற்சி மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியாவில் மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே பனிரென்டாம் வகுப்பு முடித்த பின், மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களில் சேர்ந்து இதற்கெனப் பிரத்யேகமாகப் படித்து நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அப்படிப்பில் சேர்ந்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு பயம் மற்றும் தோல்வி பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து வருவது அதிகரித்து வரும் நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக, அதிமுக, பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.
 
இந்த நிலையில்,  ராஜஸ்தான்  மாநிலம் கோட்டாவில் நீட் பயிற்சி மாணவர்கள் தற்கொலை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள கோட்டா மாவட்டத்தில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்று வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 
இந்த ஆண்டு அந்த மாவட்டத்தில் நுழைவுத் தேர்வு பயிற்சி மாணவர்கள் தற்கொலை எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணிக்கு போகும் ஓபிஎஸ், டிடிவி?!.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!...

மது வாங்கும்போது 10 ரூபாய் அதிகம் செலுத்த வேண்டும்.. காலி பாட்டிலை கொடுத்து அந்த 10 ரூபாயை திரும்ப பெறலாம்: டாஸ்மாக்

சகோதரி மம்தாவுக்கு வாழ்த்துக்கள்.. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவுகள்..!

தற்கொலைக்கு முயன்ற மகள் உயிர் தப்பினார்.. காப்பாற்ற சென்ற தந்தை பரிதாப பலி..!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments