Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அகற்றப்பட்டது சச்சின் பைலட் பெயர்ப்பலகை: அடுத்து என்ன??

அகற்றப்பட்டது சச்சின் பைலட் பெயர்ப்பலகை: அடுத்து என்ன??
, புதன், 15 ஜூலை 2020 (12:01 IST)
சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 
 
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கும் இடையே மோதல் எழுந்தது. இதனால் அங்கு ஆட்சி கவிழும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால்,  காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அசோக் கெலாட் தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.     
 
இதனைத்தொடர்ந்து நேற்று ஜெய்ப்பூரில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில் துணை முதல்வர் சச்சின் பைலட்டை காங்கிரசிலிருந்து நீக்க எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் செய்தனர்.    
 
அதன்படி சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவியும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. சச்சின் பைலட்டுக்கு பதில் கோவிந்த் சிங் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  
webdunia
இந்நிலையில் இதற்கு சச்சின் பைலட் சத்தியத்தை தொந்தரவு செய்யலாம்; ஆனால் தோற்கடிக்க முடியாது என ட்விட்டரில் பதிவிட்டார். இத்னைத்தொடர்ந்து தற்போது நான் பாஜகவில் இணையபோவதில்லை என அறிவித்துள்ளார்.  
 
அவர் கூறியதாவது, டெல்லியில் தலைமை பதவிகளில் உள்ளோரின் மனதில் நஞ்சை கலக்க சிலர் நான் பாஜகவில் இணைய இருப்பதாக கூறிவருகிறார்கள். ஆனால் நான் பாஜகவில் இணைய மாட்டேன் என சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். 
 
சச்சின் பைலட் நீக்கப்பட்டதை அடுத்து, ஜெய்ப்பூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து அவரது பெயர்ப்பலகை அகற்றப்பட்டது.  தனது ட்விட்டர் பக்கத்தில் துணை முதலமைச்சர் மற்றும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் எனக் குறிப்பிட்டிருந்ததை சச்சின் பைலட்டும் நீக்கினார்.
 
தற்போது சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ராஜஸ்தான் அரசுக்கு எதிராக செயல்பட்டது, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தள்ளுபடி செய்த கோர்ட்; கையில் எடுக்கும் ஸ்டாலின்: மின் கட்டண விவகாரம் என்னவாகும்?