Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற கூட்டத்திற்கு ஒரு காங்கிரஸ் எம்பி கூட வரவில்லை.. என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (12:14 IST)
இன்று குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இன்றைய கூட்ட தொடரில் ஒரு காங்கிரஸ் எம்பி கூட வரவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளன. 
 
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் தற்போது இந்த கூட்டத்தை தொடங்கி வைத்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் உரையாற்றி வருகிறார்.
 
இந்த நிலையில் திமுக எம்பிக்கள் உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் பலர் நாடாளுமன்றத்தில் கலந்து கொண்ட நிலையில் காங்கிரஸ் எம்பிக்கள் யாரும் இன்று கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நேற்று காஷ்மீரில் முடிவடைந்த நிலையில் அந்த நிகழ்ச்சிக்காக காங்கிரஸ் எம்பிக்கள் சென்றிருந்ததாகவும் அங்கிருந்து திரும்பி வருவதற்கு விமானம் கிடைக்கவில்லை என்பதால் காங்கிரஸ் எம்பிக்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது
 
ஸ்ரீ நகரில் இருந்து டெல்லி வருவதற்கான விமானம் வானிலை காரணமாக காலதாமத்துடன் இயக்கப்பட்டு வருவதால் குறிப்பிட்ட நேரத்தில் காங்கிரஸ் எம்பிக்களால் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments