Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றம் வந்தார் ராகுல் காந்தி.. லண்டன் பேச்சுக்கு விளக்கம்..!

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (14:50 IST)
நாடாளுமன்றத்தில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த நான்கு நாட்களாக எம்பிக்கள் அமளியால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
லண்டனில் ராகுல் காந்தி பேசிய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பாஜக உறுப்பினர்களும் அதானி குழும விவகாரம் குறித்து விசாரணை குழு அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கோஷமிட்டு வருவதால் நாடாளுமன்றத்தில் எந்த ஒரு மசோதாக்களும் நிறைவேற்றப்படவில்லை. 
 
இந்த நிலையில் இன்று ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். லண்டன் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது இந்தியாவுக்கு எதிராக தான் எதுவும் பேசவில்லை என்றும் எனக்கு அனுமதி தந்தால் நாடாளுமன்றத்தில் இது குறித்து விளக்கம் அளிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments