Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 பேர் போதும்.. ஒரே இரவில் மார்க்சிஸ்ட் அலுவலகத்தை நொறுக்கி விடலாம்: காங்கிரஸ் பிரபலம்..!

Mahendran
திங்கள், 9 டிசம்பர் 2024 (13:25 IST)
காங்கிரஸ் தொண்டர்கள் 10 பேர் இருந்தால் போதும் ஒரே இரவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை அடித்து நொறுக்கி விடலாம் என கேரள காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பினராயி என்ற பகுதியில் புதிதாக கட்டப்பட்ட காங்கிரஸ் அலுவலகத்தை மர்ம நபர்கள் சூறையாடிய நிலையில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் தான் காரணம் என்றும் அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் கேரளா காங்கிரஸ் தலைவர் சுதாகரன், இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் கட்சியினை தயாராக இருக்க வேண்டும் என்றும், 10 காங்கிரஸ் தொண்டர்கள் இருந்தால் போதும் ஒரே இரவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடி விட முடியும் என்றும் கூறியுள்ளார்.

அவரது பேச்சு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments