Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானி முறைகேடு விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை! காங்கிரஸ்

Siva
வியாழன், 21 நவம்பர் 2024 (11:50 IST)
அதானி முறைகேடு விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என காங்கிரஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள போலி நிறுவனங்கள் மூலம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்ட நிலையில், தற்போது சூரிய ஒளியின் ஒப்பந்தங்களை பெறுவதற்காக 2100 கோடி ரூபாய் அதானி கொடுத்ததாகவும், அதை மறைத்து அமெரிக்காவில் முதலீடுகளைப் பெற்றதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கூறியபோது, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அதானி மீது பல்வேறு முறைகேடுகளை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும். மோடி மற்றும் அவருக்கு நெருக்கமான தொழிலதிபர் குறித்த கேள்விகளுக்கு இப்போது வரை பதில் அளிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

மேலும், லாபம் தரக்கூடிய சூரிய ஒளி மின்சார விநியோகத்தை பெறுவதற்கு 2,100 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், நம்பகத்தன்மை கொண்ட புதிய செபி தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும், முழு அளவிலான விசாரணையை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments