Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2024 தேர்தலில் பாஜகவிற்கு காங். சவால் விட முடியும் - பிரசாந்த் கிஷோர்

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (12:03 IST)
காங்கிரஸ் இன்று தனது செயல் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல் படுத்தினாலே 2024 தேர்தலில் பாஜகவிற்கு சவால் விட முடியும் என பிரசாந்த் கிஷோர் பேட்டி. 

 
அரசியல் கட்சிகளை வெற்றி பெற வைக்க ஆலோசனை கூறும் நிறுவனத்தை நடத்தி வரும் பிரசாந்த் கிஷோர், 2024 ஆம் ஆண்டு பிரதமர் மோடியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்.
 
இந்நிலையில் சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல் வெற்றி குறித்து அவர் கூறிய போது இந்தியாவுக்கான யுத்தம் 2024 ஆம் ஆண்டில் மட்டுமே நடத்தப்பட்டு முடிவு ஏற்படுமே தவிர தற்போது நடைபெற்ற மாநில தேர்தல் அல்ல பிரதமர் மோடிக்கு இது நன்றாக தெரியும் என்றும் கூறினார். 
 
இதனைத்தொடர்ந்து தனது சமீபத்திய பேட்டியில், காங்கிரஸ் மறு அவதாரம் எடுக்க வேண்டும். அதன் அடிப்படையை சரி செய்ய வேண்டிய நேரம் இது. அதன் ஆன்மா, கருத்துக்கள் மற்றும் சித்தாந்தங்கள் அனைத்தும் புதியதாக இருக்க வேண்டும். சோனியாகாந்தி குடும்பத்தினர் காங்கிரஸ் தலைமை பொறுப்பில் இருந்து வெளியேறினாலும் அந்த கட்சி மீண்டும் உயிர் பெற முடியாது. 
 
காங்கிரஸ் இன்று தனது செயல் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல் படுத்தினாலே 2024 தேர்தலில் பாஜகவிற்கு சவால் விட முடியும். 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின்வாரியம் விளக்கம்..!

திருப்பதி மாவட்டத்தில் பொதுக்கூட்டம், பேரணி நடத்த தடை.. என்ன காரணம்?

செந்தில் பாலாஜி வழக்கு: வழக்கறிஞர்களை நேரில் அழைத்து வாழ்த்திய முதல்வர்..!

'ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வழக்கு' - கூடுதல் விவரங்களை கேட்கும் தமிழக அரசு.!!

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

அடுத்த கட்டுரையில்
Show comments