Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் பிரச்சாரத்தில் தூங்கி கொண்டிருந்த காங்கிரஸ் பிரமுகர்கள்

Webdunia
வியாழன், 3 மே 2018 (18:44 IST)
கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
மேலும் இன்று பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியும் கர்நாடகத்தில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசி கொண்டிருந்தபோது மேடையில் உட்கார்ந்திருந்த காங்கிரஸ் பிரமுகர்கள் தூங்கி வடிந்த வீடியோ காட்சி ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இவ்வாறு தூங்கியவர்களில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தேர்தல் பிரச்சாரத்தின்போதே தூங்குபவர்கள், தேர்தலில் வெற்றி பெற்றுவிட்ட பின்னர் எந்த லட்சணத்தில் ஆட்சி செய்வார்கள் என்று பாஜகவினர் இந்த வீடியோவை வைத்து எதிர்பிரச்சாரம் செய்து வருகின்றனர்.,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments