Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காங்கிரஸின் இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கை! – உத்தரப்பிரதேசத்தில் எடுபடுமா?

காங்கிரஸின் இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கை! – உத்தரப்பிரதேசத்தில் எடுபடுமா?
, வெள்ளி, 21 ஜனவரி 2022 (13:55 IST)
உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் நிலையில் இளைஞர்களுக்கான தனி தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. எனினும் தேர்தலில் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளுடன் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தை, தேர்தல் அறிக்கை என தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் உத்தர பிரதேச தேர்தலில் இளைஞர்களுக்கென தனி தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. டெல்லியில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 8 லட்சம் பெண்களுக்கும், 20 லட்சம் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்த தரப்படும் என கூறப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் இளைஞர்களுக்கான இந்த தேர்தல் தனி அறிக்கை மக்களிடையே ஈர்ப்பை ஏற்படுத்துமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதமாற்றம்-ங்கர வார்த்தையே இல்ல... மாணவியின் திடுக்கிடும் மரண வாக்குமூலம்!