Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமோசா உள்ளே இருந்த ஆணுறை: புனே கேண்டீன் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு.!

Mahendran
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (15:47 IST)
புனேவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கேண்டினில் விற்பனை செய்யப்பட்ட சமோசாவில் ஆணுறை இருந்ததை அடுத்து அந்த கேண்டீன் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புனேவில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனத்தின் கேண்டினில் விற்பனை செய்யப்பட்ட சமோசாக்களில் ஆணுறை, குட்கா, கற்கள் போன்றவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
இதனை அடுத்து சமோசா வழங்கும் ஒப்பந்ததாரர்கள், சமோசா விற்பனை செய்த கேண்டின் உரிமையாளர்கள் உட்பட சிலரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்

சமோசாக்களில் ஆணுறை, குட்கா, கற்கள் போன்றவை இருந்தது குறித்து வாடிக்கையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இது குறித்து விசாரணையின் போது ஏற்கனவே உணவு வழங்கி வந்த ஒரு நிறுவனம் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் பழிவாங்கும் நடவடிக்கையில் வேண்டும் என்றே இவ்வாறு செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

 இந்த விவகாரம் குறித்து கேண்டின் உரிமையாளர் உள்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யிருப்பதாகவும் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அடுத்த கட்ட விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

நீட் தேர்வு வேண்டாம்..! பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடர வேண்டும்..! மாநில கல்வி கொள்கை பரிந்துரை..!!

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு என தகவல்..!

சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதா.? மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

அடுத்த கட்டுரையில்