Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட கூடாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை..!

Siva
செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (18:54 IST)
வயநாடு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆனிராஜா என அறிவித்து விட்டதால் அந்த தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மோடியை வீழ்த்த வேண்டும் பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் உருவான இந்தியா கூட்டணியில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இருக்கும் நிலையில் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் திடீரென ஆனி ராஜா என்ற வேட்பாளரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  கட்சியின் பிருந்தா காரத் செய்தியாளர்களிடம் பேசுகையில் வயநாடு தொகுதிக்கான வேட்பாளரை நாங்கள் அறிவித்து விட்டதால் ராகுல் காந்தி அந்த தொகுதியில் போட்டியிடுவது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும்

பாஜகவுக்கு எதிராக தேர்தலை எதிர்கொள்வது உண்மை என்றால் நாங்கள் போட்டியிட்ட வேட்பாளரை அவர் எதிர்க்காமல் வேறு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து காங்கிரஸ் என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments