Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரள முதல்வரை சேலை அணிய சொன்ன கம்யூனிஸ்ட்!!

கேரள முதல்வரை சேலை அணிய சொன்ன கம்யூனிஸ்ட்!!
, வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (13:20 IST)
பெண்களுக்கு எதிரான பிரச்சனை புரிந்துக்கோள்ள கேரளா முதல்வர் ஒரு நாள் சேலை கட்டி சாலையில் நடந்து செல்ல வேண்டும் என கே.ஆர். கெளரியம்மா கூறியுள்ளார்.


 
 
கேரளாவில் 2001 - 2006 வரை இருந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் கே.ஆர் கெளரியம்மா.
 
கேரளாவில் மாநில சட்டசபை வைர விழா நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சட்ட சபையில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள் கே.ஆர்.கவுரியம்மா, சந்திரசேகரன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடந்தது.
 
அப்போது பேசிய கே.ஆர் கெளரியம்மா, நான் எம்.எல்.ஏவாக இருந்த பொழுது இரவு 12 மணிக்கு கூட வேலையை முடித்துவிட்டு தனியாக செல்வேன். ஆனால் தற்போது பகலில் கூட தனியாக பெண்கள் செல்ல முடியவில்லை. 
 
பெண்களின் பிரச்னைகளை புரிந்துகொள்ள, முதல்வர் பினராயி விஜயன் சேலையை கட்டி சாலையில் நடந்து சென்றால்தான் தெரிந்துகொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதை பார்த்த நடிகை கஸ்தூரி: டுவிட்டரில் குறும்பு!