Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சனி மற்றும் ஞாயிறு வங்கிகள் செயல்படும்

சனி மற்றும் ஞாயிறு வங்கிகள் செயல்படும்
, புதன், 9 நவம்பர் 2016 (18:08 IST)
வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் வங்கிகள் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


 

 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மறுநாள் அதாவது இன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஏடிஎம்களும் முடக்கப்பட்டது.
 
இதனால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களுக்கு வசதியாக வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் வங்கிகள் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் பொதுமக்கள் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தேதிகளில் வங்கிகளுக்கு சென்று பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். மேலும் 11ஆம் தேதி முதல் ஏடிஎம்களில் இருந்து புதிய ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மரணிக்கும் காவிரி விவசாயிகள்: இதயமற்ற ஆட்சியாளர்கள்!