Webdunia - Bharat's app for daily news and videos

Install App

80 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் அதிசயம்! வானிலை ஆர்வலர்கள் தகவல்..!

Mahendran
வியாழன், 17 அக்டோபர் 2024 (11:05 IST)
80 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவில் வால் நட்சத்திரம் தென்பட தொடங்கியுள்ளதாக வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ள தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூரிய மண்டலத்தில் நுழைந்துள்ள C/2023 ஏ3 என்ற அரிய வகை வால் நட்சத்திரம் கடந்த 14 ஆம் தேதி முதல் வரும் 24 ஆம் தேதி வரை இந்தியாவில் தென்படும் என்று வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ல்டாக் ஆகிய பகுதிகளில் இரவில் இந்த வால் நட்சத்திரத்தை பார்க்க முடியும் என்றும், தொலைநோக்கி அல்லது பைனாகுலர் வழியாக தெளிவாக பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் அரிதாகவே இந்தியாவில் வால் நட்சத்திரம் தெரியும் நிலையில் சுமார் 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் ஒரு சில பகுதிகளில் இந்த வால் நட்சத்திரம் தெரியும். இதையடுத்து இரவில் பல வானிலை ஆர்வலர்கள் வானத்தை நோக்கி அந்த வால் நட்சத்திரத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எரிபொருளை அள்ளி செல்ல ஓடி வந்த மக்கள்; வெடித்து சிதறிய டேங்கர்! - 147 பேர் உடல் கருகி பலி!

2வது நாளாக மீண்டும் பங்குச்சந்தை சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.160 உயர்வு..!

கரையைக் கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. சேதம் எதுவும் இல்லை என தகவல்..!

நண்பனை பழிவாங்க விமானங்களுக்கு வெடிக்குண்டு மிரட்டல்! - சத்தீஸ்கரில் சிறுவன் கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments