Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரலாற்றில் முதல்முறையாக ஆளுனர் அலுவலகம் முன் தர்ணா செய்யும் முதல்வர்

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2019 (14:33 IST)
ஆளுனரும் முதல்வரும் கருத்து வேறுபாடு கொள்வது என்பது பல மாநிலங்களில் நடக்கும் நிகழ்வாக இருக்கும் என்பது தெரிந்ததே. தமிழகத்தில் கூட முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு கவர்னராக இருந்த சென்னாரெட்டிக்கும் பல கருத்து மோதல்கள் இருந்தன
 
ஆனால் கவர்னரிடம் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவருடைய மாளிகைக்கு முன் ஒரு முதல்வர் தர்ணா போராட்டம் நடத்தும் முதல் நிகழ்வு புதுச்சேரியில் நடந்துள்ளது.
 
புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமிக்கும் கவர்னர் கிரண்பேடிக்கும் கடந்த பல மாதங்களாக மோதல் இருந்து வரும் நிலையில் மாநில வளர்ச்சிக்கு கவர்னர் தடையாக இருப்பதாக கூறி முதலமைச்சர் நாராயணசாமி சற்றுமுன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 
 
முதல்வருடன் புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏக்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். முதல்வர் நாராயணசாமியும் அவரது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்களும் கருப்பு சட்டையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கவர்னர் மாளிகை அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments