Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு, நிலச்சரிவு! 60 பேர் பலி!

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2023 (09:23 IST)
இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவால் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கங்கை, யமுனை நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டுள்ளனர். மீட்பு பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் இதுவரை நிலச்சரிவில் சிக்கி 60 பேர் பலியானதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். நிலச்சரிவுகளில் இருந்து 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

மேலும் டேராடூன், பவுரி, தெக்ரி, நைனிடால் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இமாச்சல பிரதேசத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ரிநாத், கேதர்நாத் புனித தலங்கள் செல்லும் பாதைகள் நிலச்சரிவில் சேதமடைந்துள்ளதால் ஆன்மீக யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவியுடன் வீடியோ கால் பேசி முடித்தவுடன் தூக்கில் தொங்கிய வழக்கறிஞர்.. சென்னையில் அதிர்ச்சி..!

அமெரிக்கா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உலக முதலீட்டாளர்களை சந்திக்க என தகவல்..!

சென்னை கோயம்பேட்டில் மேற்குவங்க தீவிரவாதி. அதிரடியாக கைது செய்த போலீஸ்..

குறுவை சாகுபடி பாதிப்பு.! இபிஎஸ் வைத்த முக்கிய கோரிக்கை..!!

விஷச்சாராய விவகாரத்தில் கபட நாடகமாடுகிறார் எடப்பாடி..! கருணாஸ் காட்டம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments