Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு, நிலச்சரிவு! 60 பேர் பலி!

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2023 (09:23 IST)
இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவால் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கங்கை, யமுனை நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டுள்ளனர். மீட்பு பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் இதுவரை நிலச்சரிவில் சிக்கி 60 பேர் பலியானதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். நிலச்சரிவுகளில் இருந்து 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

மேலும் டேராடூன், பவுரி, தெக்ரி, நைனிடால் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இமாச்சல பிரதேசத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ரிநாத், கேதர்நாத் புனித தலங்கள் செல்லும் பாதைகள் நிலச்சரிவில் சேதமடைந்துள்ளதால் ஆன்மீக யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

இந்தியாவுக்கு போட்டியாக தூது குழுவை அனுப்பும் பாகிஸ்தான்… பிலாவல் பூட்டோ தான் தலைமை!

அடுத்த கட்டுரையில்
Show comments