Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி, 6 பேர் காயம்

Siva
ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2025 (12:13 IST)
ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜோத் காட்டி கிராமத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட மேகவெடிப்பால், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
 
ஒரே இரவில் பெய்த கனமழையால், கிராமத்திற்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உள்ளூர் தன்னார்வலர்களின் உதவியுடன் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதுவரை, உயிரிழந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்த 6 பேர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
 
மேலும் மாவட்ட நிர்வாகம், தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. மேலும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
முன்னதாக, கடந்த வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பில், வெள்ளத்தில் சிக்கி மாயமான 82 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. அந்தத் துயரச் சம்பவத்தின் அதிர்ச்சி நீங்குவதற்குள் மீண்டும் அடுத்தடுத்த மேகவெடிப்பு சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாவம் திருமாவளவன்.. சேரக்கூடாத இடத்தில் சேர்ந்துவிட்டார்! - வருந்திய எடப்பாடி பழனிசாமி!

பிரபல யூடியூபர் வீட்டில் துப்பாக்கிச் சூடு: 30 குண்டுகள் வீட்டை நோக்கி பாய்ந்ததால் பரபரப்பு..!

திடீரென பத்மநாப சுவாமி கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.. என்ன காரணம்?

நாய்களோ அப்பாவி.. இரக்கமோ நமது மொழி.. சென்னையில் விலங்கு ஆர்வலர்கள் போராட்டம்..!

பாஜக ஆளும் மாநிலங்கள்ல போய் கம்பு சுத்துங்க! - ஆளுநர் ரவியை சாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments