Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரம் மீது ஏறி பெண் தற்கொலை மிரட்டல்

மரம் மீது ஏறி பெண் தற்கொலை மிரட்டல்

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (05:21 IST)
பீகாரை சேர்ந்தவர் பச்சா தேவி, மகாராஷ்டிராவில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவரது மகனை ஒரு கும்பல் கொலை செய்தது.


 


இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், மகனை கொலை செய்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்யவில்லை. இது குறித்து காவல்துறையினரிடம் அப்பெண் பல முறை முறையிட்டும் பதில் இல்லை. இதனால், பச்சா தேவி டெல்லியில் உள்ள முக்கிய தலைவர்களை சந்தித்து முறையிட நேரில் வந்திருந்தார்.

இதை அடுத்து, ஜந்தர் மந்தரில் மரத்தின் மேல் ஏறிய தேவி, தனது மகனுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர் அப்பெண்ணிடம் சமாதானம் பேசி கீழே இறக்கினர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதல்வர் அலுவலக ஊழியர்கள் 2 பேர் கைது.. ரூ.5 லட்சம் ரொக்கம் பறிமுதலா?

சீனா, ஹாங்காங்கில் இருந்து வரும் சர்வதேச பார்சல்கள் நிறுத்தம்.. அமெரிக்கா அதிரடி

இன்னும் 2 வாரங்களுக்கு பனிமூட்டம் இருக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

போலி ஆவணம் தயாரித்து கடன் வழங்கியதாக வங்கி அதிகாரிகள் மீது புகார்! - 3 மாதத்தில் விசாரணையை முடிக்க நீதிமன்றம் உத்தரவு!

'காசாவை அமெரிக்கா கைப்பற்றும்: இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பின் டிரம்ப் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments