Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

9-ஆம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் செய்து கொலை

9-ஆம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் செய்து கொலை
, செவ்வாய், 19 ஜூலை 2016 (14:20 IST)
மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகர் மாவட்டத்தில் கர்ஜத் தாலுக்காவில் உள்ள கொபர்டி கிராமத்தில் கடந்த 13-ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.


 
 
இந்த கூட்டு பலாத்கார மற்றும் கொலை செயலில் ஈடுபட்ட மூன்று பேரையும் கைது செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு வக்கீலை நியமிக்க கோரிக்கை எழுந்ததை அடுத்து உஜ்வல் நிகம் என்ற வழக்கறிஞரை முதல்வர் தேவிந்திர பட்னாவிஸ் நியமித்துள்ளார்.
 
தனது தாத்தா வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள தனது வீட்டிற்கு கடந்த 13-ஆம் தேதி மாலை 6:45 மணிக்கு அந்த மாணவி வந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
 
மாணவியின் பிரேத பரிசோதனையில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக சித்ரவைதை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மகாராஷ்டிராவின் நிர்பயா வழக்கு என பேசப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவாதி வழக்கில் சட்டவிரோதமாக பேசியிருந்தால் என்னை கைது செய்யலாம் : திருமாவளவன்