சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு..! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

Senthil Velan
புதன், 6 மார்ச் 2024 (13:30 IST)
சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்,  ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது.  அதன்படி,  வரும் மே மாதம் 26-ம் தேதி சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நடைபெறவுள்ளது.

சுமார் 1,056 இடங்களுக்காக இந்தத் தேர்வு நடைபெறுகிறது. தொடர்ந்து தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று மாலையுடன் நிறைவடைய இருந்தது.  கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

ALSO READ: 'நீங்கள் நலமா' திட்டம் தொடக்கம்..! புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

இந்த நிலையில், சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் upsconline.nic.in இணைய தளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

20 லட்சம் கடன் தருவதாக கூறி லட்சக்கணக்கில் ஏமாந்த நபர்.. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments