Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை திருத்த சட்டம்..! மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற உத்தரவு..!!

Senthil Velan
செவ்வாய், 19 மார்ச் 2024 (16:04 IST)
குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அண்மையில் மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 
இதனிடையே அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் 237 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு, காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ், திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி மஹுவா மொய்த்ரா மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் ஒவைசி ஆகியோர் ஆகியோரின் மனுக்களும் அடங்கும்.
 
இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (CAA) தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் குறித்து பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ALSO READ: அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் எடப்பாடி ஆலோசனை..!
 
ஏப்ரல் 8-ம் தேதிக்குள் மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் வெளியே வரவே மாட்டான். மக்களை சந்திக்கவே மாட்டான்' என்று ஆள் வைத்து சொன்னார்கள்: விஜய் அறிக்கை

நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன்.. பெரம்பலூர் மக்களுக்கு விஜய் கொடுத்த உறுதிமொழி..!

விஜய் குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை: பிரேமலதா விஜயகாந்த்

நீட் விலக்கு வாக்குறுதியை இப்போதைக்கு நிறைவேற்ற முடியவில்லை: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் ரேபிஸ் நோய் தாக்கி ஒருவர் உயிரிழப்பு: நாய் ஆர்வலர்களால் இன்னும் எத்தனை பலி?

அடுத்த கட்டுரையில்
Show comments