Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிற்கு எதிராக தீவிர பயிற்சியில் பாகிஸ்தான்! – அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (11:20 IST)
இந்தியாவின் படைபலத்தை எதிர்க்கும் அளவிற்கு பாகிஸ்தானும் ஆயுதங்களை அதிகரித்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை, காஷ்மீர் தொடர்பான பிரச்சினை நிலவி வரும் நிலையில் அடிக்கடி எல்லைகளில் தாக்குதல், மோதல் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

கடந்த 2019ம் ஆண்டில் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளிடையேயான உறவுநிலை மோசமடைந்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள அமெரிக்க உளவுத்துறை அதிகாரி லெப்டினெண்ட் ஜெனரல் ஸ்காட் பேரியர் “இந்தியாவின் அணு ஆயுதங்கள், ராணுவ பலத்தை பார்த்து பாகிஸ்தான் தங்கள் நாட்டு அணு ஆயுதங்களை முக்கியமானதாக கருதுகிறது. இந்தியாவுக்கு போட்டியாக தங்கள் ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் பாகிஸ்தான், அணு ஆயுதங்களை நவீனப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷட்டில் பேட்மிண்டன் விளையாடும்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு: 25 வயது ஐடி ஊழியர் மரணம்!

நிமிஷா பிரியா விடுதலைக்காக ஏமன் பயணம் செய்யும் 13 வயது மகள்..உலுக்கும் சோகம்!

அகமதாபாத் விமான விபத்து.. காயமடைந்த மகனை காப்பாற்ற தியாகம் செய்த தாய்.. சிகிச்சைக்கு வழங்கிய தோல்..!

'ஆபரேஷன் மகாதேவ்'.. பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை..!

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஏற்கப்படுமா? உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments