Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லடாக் ஏரியில் பாலம்; மீண்டும் சீண்டும் சீனா! – தீவிர கண்காணிப்பில் இந்தியா!

Pangong Lake
, வெள்ளி, 20 மே 2022 (10:43 IST)
லடாக் பகுதியில் இந்திய – சீன ராணுவத்தினர் இடையே மோதல் நடந்த பாஹ்காங் ஏரியில் சீனா பாலம் கட்டி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய – சீன படைகள் இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். அதேபோல சீன தரப்பிலும் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீனா கூறியது.

இதை தொடர்ந்து இருநாடுகளும் எல்லைப்பகுதியில் ராணுவத்தை குவித்த நிலையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது.

கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு இந்தியா – சீனா இடையே நீண்ட நாட்களாக சர்ச்சையில் இருக்கும் இன்னொரு எல்லைப்பகுதியான பாங்காங் டிசோ ஏரியில் சீனா பல்வேறு கட்டமைப்புகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாங்காங் டிசோ பகுதியில் சீனா பாலம் ஒன்றை கட்டியது. அதை தொடர்ந்து தற்போது இரண்டாவதாக மற்றொரு பாலத்தை கட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் “ஆக்கிரமிக்கப்பட்ட பாங்காங் டிசோ ஏரியில் சீனா பாலம் அமைப்பதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்வறையில் 5 கிலோ பிட்.. 11 கண்காணிப்பாளர்கள் நீக்கம்! – நாமக்கலில் பரபரப்பு!