Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்பதிவு இன்றி ரயில் பயணம் செல்பவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

Webdunia
திங்கள், 9 ஏப்ரல் 2018 (12:54 IST)
முன்பதிவு இல்லாமல் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் எத்தகைய அவஸ்தைப்படுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. நிமிடக்கணக்கில் டிக்கெட் எடுக்க வரிசையில் காத்திருக்க வேண்டும். அதன் பின்னர் முன்பதிவு இல்லாத பெட்டிகளை உட்கார இடம் தேடி ஓட வேண்டும். பல நேரங்களில் வெகுதூரம் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்
 
இந்த நிலையில் முன்பதிவில்லா டிக்கெட் பயணிகளுக்கு உதவும் வகையில், மொபைல் ஆப் ஒன்றை ரயில்வே துறை உருவாக்கியுள்ளது.  R-Wallet எனப்படும் ஆன்லைன் வசதி மூலம் தங்களுடைய முன்பதிவில்லா ரயில்வே டிக்கெட் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி பெற்று கொள்ளலாம். ஏற்கனவே  புறநகர் ரயில் டிக்கெட்கள், பிளாட்பாரம் டிக்கெட்டுக்கள் ஆகியவைகளை பெற மொபைல் ஆப் உள்ளது என்பது தெரிந்ததே. 
 
எனவே இனிமேல் முன்பதிவு இல்லாமல் ரயிலில் பயணம் செய்பவர்கள் டிக்கெட் எடுக்க கால்கடுக்க காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த புதிய வசதி பயணிகளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாகவே உள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments