Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஞ்சன் கோகாய்க்கு எதிராக சின்மயி ஆர்ப்பாட்டம் – காவல்துறையில் அனுமதி !

Webdunia
புதன், 8 மே 2019 (14:06 IST)
உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய பாடகி சின்மயி காவல்துறையினரிடம் அனுமதி கோரியுள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட மீ டூ இயக்கத்தைத் தொடங்கி வைத்தவர் பாடகி சின்மயி. பாடல் ஆசிரியர் வைரமுத்து மீது புகார் அளித்ததோடு மேலும் பலர் தங்கள் புகார்களை சின்மயி மூலமாக வெளிப்படுத்தவும் உதவினார். ஆனால் வைரமுத்து மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாததும் உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்காமலும் உள்ளதும் அவர் மீது விமர்சனங்களும் எழுந்துள்ளன.

அதன் பின்னர் பாலியல் அத்துமீறல் நிகழ்வுகள் நடக்கும் போது குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். இந்நிலையில் இப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டு நாட்டையே உலுக்கியுள்ளது. இதையடுத்து நீதிபதிக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார் சின்மயி. இதற்காக காவல்துறையில் அனுமதிக் கேட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்