Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா வரி விதித்தால் இந்தியாவுக்கு துணையாக இருப்போம்: சீனா உறுதி

Mahendran
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2025 (10:08 IST)
அமெரிக்கா விதித்த கூடுதல் வரிகளுக்கு எதிராக இந்தியாவுக்கு ஆதரவாக நிற்போம் என சீனா கூறியுள்ளது, உலக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்துள்ள நிலையில், சில இந்திய துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில், உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், சீனாவும் இந்தியாவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது.
 
இந்தியாவுக்கான சீனத் தூதர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "இந்தியாவின் மீது அமெரிக்கா 50% வரிகளை விதித்து அச்சுறுத்தி வருகிறது. சீனா இதை உறுதியாக எதிர்க்கிறது. இதுபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும்போது இந்தியாவுடன் சீனா உறுதியுடன் இருக்கும். இந்தியாவும் சீனாவும் போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளி நாடுகள்" என்று தெரிவித்துள்ளார். 
 
இந்த நிலையில், அடுத்த வாரம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சந்திப்பின்போது, சீன அதிபர் சீ ஜின்பிங்கும் இந்திய பிரதமரும் அமெரிக்காவின் வரிவிதிப்பு குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்ணை கொலை செய்து 7 துண்டுகளாக வெட்டி கிணற்றில் வீசிய காதலன்.. 2 பேர் கைது..!

அட்ரஸ் இல்லாத லட்டருக்கு நான் எப்படி பதில் போட முடியும்: விஜய்க்கு கமல் பதிலடி..!

இன்று சென்னை தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

விஜய்க்கு எதிராக நயன்தாராவை இறக்குவார்கள்: பழ கருப்பையா

ஆன்லைன் சூதாட்ட மசோதா எதிரொலி: பணம் கட்டி விளையாடும் போட்டிகளை நிறுத்துகிறது Dream 11!

அடுத்த கட்டுரையில்
Show comments