Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீனா ராணுவத்தால் கடத்தப்பட்ட இந்திய சிறுவன்! – சீனா அளித்த வாக்குறுதி!

Advertiesment
India
, ஞாயிறு, 23 ஜனவரி 2022 (15:42 IST)
சீன ராணுவத்தால் கடத்தப்பட்டதாக கூறப்படும் இந்திய சிறுவனை ஒப்படைப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

சீனா – இந்தியா இடையே பல ஆண்டுகளாக எல்லையை பகிர்ந்து கொள்வதில் பிரச்சினை நிலவி வருகிறது. சமீப காலத்தில் லடாக் மற்றும் சில பகுதிகளில் சீன ராணுவத்தின் அத்துமீறலும், திட்டமிட்ட குடியிருப்புகளும் இரு நாடுகளுக்கிடையேயான உறவுநிலையில் விரிசலை ஏற்படுத்தியுள்ளன.

எல்லை தொடர்பான பிரச்சினையை பேசி தீர்க்க இரு நாடுகளும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த வாரத்தில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த மித்ரரோன் என்ற சிறுவன் சீன ராணுவத்தால் கடத்தப்பட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் சிறுவன் பாதை மாறி சீன எல்லைக்குள் நுழைந்ததாக சீனா விளக்கம் அளித்துள்ளது. எனினும் சிறுவனை பத்திரமாக இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்க தாங்கள் தயாராக உள்ளதாக சீனா உறுதி அளித்துள்ளது. அடுத்த வாரம் சிறுவன் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுவான் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒமிக்ரானின் புதிய மாறுபாடு கண்டுபிடிப்பு! – அடுத்த அதிர்ச்சி