Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரின் சகோதரி கைது…தொண்டர்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (15:45 IST)
ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி  இன்று போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி   ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி தனது தந்தையின் பிறந்தநாளான ஜுலை 8 ஆம் தேதி தனிக்கட்சி ஒன்றைத் துவங்கவுள்ளதாக அறிவித்தார்.

இதற்கான தனது கட்சியின் சின்னம், கொடி, மற்றும் கொள்கைகள் அன்றைய தினம் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்நிலையில்,  ஹைதராபாத்தில் சந்திரசேகரராவ் அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஜெகன் மோஜன் ரெட்டியின் சகோதரி ஈடுபட்டுக் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் பல்வேறு துறையில் காலிப்பணியிடஙக்ள் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு எதுவும்  வெளியாகவில்லை என்று விமர்சித்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. தற்கொலை செய்து கொண்டவருக்கு ஆதரவாக ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி   ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அப்போது ஹைதரபாத் காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments