Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே மாநிலத்தில் முதல்வர்-ஆளுனர் இருவருக்கும் கொரோனா பாதிப்பு!

corona
, புதன், 22 ஜூன் 2022 (16:30 IST)
ஒரே மாநிலத்தில் முதலமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ்தேவ் தாக்கரே அவர்களுக்கு இன்று காலை கொரோனா உறுதிசெய்யப்பட்டது. 
 
இதனை அடுத்து மகாராஷ்டிரா மாநில கவர்னருக்கும் கொரோனா  வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து முதல்வர், கவர்னர் ஆகிய இருவருமே தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் 
 
ஒரு மாநிலத்தில் முதல்வர், ஆளுநர் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அன்பு சகோதரர் விஜயகாந்த் குணமாக வேண்டும்: ஈபிஎஸ் வாழ்த்து!