Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குண்டு வைத்த மாவோயிஸ்ட்! 11 பேர் உடல் சிதறி பலி! – சத்தீஸ்கரில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (08:29 IST)
சத்தீஸ்கரில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளை பிடிக்க சென்ற போலீஸார் குண்டு வெடித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கிழக்கு மாநிலங்களான சத்தீஸ்கர், ஒடிசா பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ள நிலையில் அவர்களை பிடிக்க அம்மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பாஸ்டர் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக சத்தீஸ்கர் போலீஸாருக்கு தெரிய வந்துள்ளது.

இதையடுத்து ரோந்து படை ஒன்று அவர்களை பிடிக்க சென்றபோது மாவோயிஸ்டுகள் வைத்த குண்டு வெடித்து ரோந்து சென்ற 10 போலீஸார் உட்பட 11 பேர் உடல் சிதறி பலியானார்கள். இந்த கோர சம்பவம் சத்தீஸ்கரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலிஃபொர்னியா கலவரம்! கவர்னரை கைது செய்ய ட்ரம்ப் திட்டம்? 2000 காவல்படையினர், 700 கடற்படையினர் குவிப்பு!

கள்ளக்காதலை கழற்றி விட முயன்ற பெண்! உல்லாசமாக இருந்துவிட்டு உயிரை பறித்த கள்ளக்காதலன்!

அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய் கட்சி.. இதுக்கு தான் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி வந்தாரா?

ஒரே நேரத்தில் பிஏ, பிஎஸ்சி என 2 பட்டப்படிப்புகள் படிக்கலாம்: யுஜிசி அறிவிப்பு..!

கண்ணீர் புகை, ரப்பர் குண்டுகள்.. வலுக்கிறது அமெரிக்காவில் போராட்டம்.. டிரம்ப் பதவிக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments