Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர், உதயநிதியை ஏமாற்றிய மாற்றுத்திறனாளி வீரர் மீது வழக்குப்பதிவு..!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (07:56 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை ஏமாற்றிய மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் கேப்டன் என்று கூறிக்கொண்டு கோப்பையை வென்றதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டவர் மாற்றுத்திறனாளி வினோத் பாபு. 
 
இதனை அடுத்து சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டி என்பதை ஒன்று நடைபெறவில்லை என்பதும் கடையில் வாங்கிய கோப்பையை காட்டி முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஏமாற்றியதாகவும் பின்னர் தெரியவந்தது. 
 
இதனை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்களை ஏமாற்றிய மாற்றுத்திறனாளி வினோத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பேக்கரி உரிமையாளர்களிடம் இருந்து ஒரு லட்சம் பெற்று ஏமாற்றிய புகாரில் வினோத்குமார் மீது இராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments