Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாரன் அடிச்ச நகர மாட்டியா..? – காது கேளாதவரை குத்தி கொன்ற சிறுமி!

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (11:40 IST)
சத்தீஸ்கரில் சாலையில் வழிவிடாத காது கேளாத நபரை 15 வயது சிறுமி குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் 15 வயது சிறுமி ஒருவர் தனது தாயாருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். நெரிசலான சாலையில் சென்றபோது முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மெதுவாக சென்றதால் சிறுமி தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார்.

ஆனாலும் முன்னால் சென்றவர் தொடர்ந்து மெதுவாகவே சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமி வேகமாக சென்று அந்த வாகனத்தை வழிமறித்ததுடன் அதை ஓட்டி சென்றவர் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் அந்த நபர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி பதட்டத்தில் தன் தாயாரை சாலையிலேயே விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சிறுமியை கைது செய்துள்ளனர். விசாரணையில் இறந்த நபர் காதுகள் கேட்கும் திறன் அற்றவர் என்ற சோகமான உண்மை தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments