Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்

இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
, வியாழன், 21 செப்டம்பர் 2017 (00:50 IST)
எஸ்பிஐ எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்த ஆறு வங்கிகளின் செக்புக் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பின்னர் செல்லாது என்றும் எனவே வாடிக்கையாளர்கள் தங்களிடம் இருக்கும் செக்புக்குகளை வங்கிகளில் ரிட்டன் கொடுத்துவிட்டு புதிய செக்புக்குகளை பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.



 
 
அதேபோல் ஆறு வங்கிகளின் IFSC கோட் எண்களும் மாற்றப்பட்டுள்ளதாகவும், மாற்றப்பட்ட புதிய கோட் எண்களை அந்தந்த வங்கியில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. எஸ்பிஐ வங்கியின் இந்த புதிய அறிவிப்பால் ஆறு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
 
எஸ்பிஐ குறிப்பிட்டுள்ள அந்த ஆறுவங்கிகள் பின்வருமாறு:
 
1. பாரதிய மகிளா வங்கி
 
2. பேங்க் ஆப் பட்டியாலா
 
3. ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர்
 
4. ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர்
 
5. ஸ்டேட் பாங்க் ஆப் ராஜ்பூர்
 
6. ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆம் ஆத்மி தலைவர் ஆகிறாரா கமல்? நாளை அரவிந்த கெஜ்ரிவாலுடன் சந்திப்பு