Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை-மைசூர் அதிவிரைவு ரயில் சாதாரண ரயிலாக மாற்றம்: என்ன காரணம்?

Mahendran
திங்கள், 16 டிசம்பர் 2024 (11:33 IST)
அடுத்த மாதம் முதல் சென்னை-மைசூர் அதிவிரைவு ரயில், சாதாரண ரயிலாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு  பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்பட்டுள்ளது.
 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மைசூருக்கு மதியம் 1:35மணிக்கு புறப்பட்டு, இரவு 7:55 மணிக்கு பெங்களூரை அடையும். அதன் பின் இரவு 10 மணிக்கு மைசூரை அடையும்.  இந்த ரயில், 23 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த அதிவிரைவில் ஜனவரி 3ஆம் தேதி முதல் சாதாரண ரயிலாக மாற்றப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை ரயிலின் வேகம் 55 கிலோ மீட்டர் என்று இருந்த நிலையில், வேகம் குறைப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
 
அதே நேரத்தில், சாதாரண ரயிலாக மாற்றப்பட்ட பிறகு, இரண்டாம் வகுப்பு இயற்கைக்கு ரூ.15 மற்றும் சேர் கார் இருக்கைக்கு ரூ.45 கட்டணம் குறையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு சீசன் டிக்கெட் கட்டணமும் கணிசமாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த 5 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்: வெய்யில் கொளுத்தும்: வானிலை எச்சரிக்கை!

கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் காலமானார்..!

இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை.. அமெரிக்காவில் பேசிய ராகுல் காந்தி..!

அம்மாவும் மகனும் சேர்ந்து அப்பாவை கொலை செய்த கொடூரம்.. அதிர்ச்சி காரணம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ரூ.50,000 சம்பளம் வாங்குபவர் ரூ.1,57,500 வாங்க வாய்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments