Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை-மைசூர் அதிவிரைவு ரயில் சாதாரண ரயிலாக மாற்றம்: என்ன காரணம்?

Mahendran
திங்கள், 16 டிசம்பர் 2024 (11:33 IST)
அடுத்த மாதம் முதல் சென்னை-மைசூர் அதிவிரைவு ரயில், சாதாரண ரயிலாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு  பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்பட்டுள்ளது.
 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மைசூருக்கு மதியம் 1:35மணிக்கு புறப்பட்டு, இரவு 7:55 மணிக்கு பெங்களூரை அடையும். அதன் பின் இரவு 10 மணிக்கு மைசூரை அடையும்.  இந்த ரயில், 23 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த அதிவிரைவில் ஜனவரி 3ஆம் தேதி முதல் சாதாரண ரயிலாக மாற்றப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை ரயிலின் வேகம் 55 கிலோ மீட்டர் என்று இருந்த நிலையில், வேகம் குறைப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
 
அதே நேரத்தில், சாதாரண ரயிலாக மாற்றப்பட்ட பிறகு, இரண்டாம் வகுப்பு இயற்கைக்கு ரூ.15 மற்றும் சேர் கார் இருக்கைக்கு ரூ.45 கட்டணம் குறையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு சீசன் டிக்கெட் கட்டணமும் கணிசமாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்கத்தா ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்.. பாரம்பர்ய சடங்குடன் நடத்தி வைத்த பெரியோர்கள்..!

இன்று நடைபெறவிருந்த தவெக மாவட்ட செயலாளர் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல.. ஈபிஎஸ் ஆவேச பேச்சு..!

மாமனாரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மருமகள்.. சந்தேகம் வராமல் இருக்க உடல் முழுவதும் மஞ்சள் பூச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments