Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்சய திருதியையில் குழந்தை திருமணம் அமோகம்?? – சென்னை ஆட்சியர் எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (09:21 IST)
இன்று அட்சயதிருதியை என்பதால் குழந்தை திருமணம் நடத்த முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் அரசியலமைப்பு சட்டப்படி பெண்ணின் திருமண வயது 18 ஆகவும், ஆணின் திருமண வயது 21 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு குறைவான வயதில் திருமணம் செய்வது சட்டபடி குற்றம் என்பதுடன் தண்டனைகளும் உள்ளன. ஆனாலும் மறைமுகமாக குழந்தை திருமணங்கள் நடப்பதும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று அட்சயதிருதியை நடைபெறும் நிலையில் குழந்தை திருமணம் அதிகம் நடக்க வாய்ப்பிருப்பதாக கூறியுள்ள சென்னை ஆட்சியர், இதுபோன்ற குழந்தை திருமணங்கள் நடத்துபவர்கள் மீது 2 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படும் என்றும், குழந்தை திருமணம் தொடர்பான புகார்களை 109 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்