Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி சுற்றையும் வெற்றிகரமாக முடித்த சந்திரயான் 3! – தரையிறங்குவது எப்போது?

Webdunia
ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (08:25 IST)
நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் நிலவை சுற்றும் கடைசி சுற்றுகளை முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



நிலவின் தென் துருவத்தில் நீர் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் விண்ணுக்கு அனுப்பியது. பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றி வந்து அதிலிருந்து நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்த சந்திரயான் 3 நிலவின் புகைப்படங்கள், வீடியோக்களை பூமிக்கு அனுப்பியது.

தற்போது நிலவின் சுற்றுப்பாதையில் உள்ள சந்திரயான் 3 கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுவட்ட பாதையை குறைத்து நிலவில் தரையிறங்கும் ப்ராசஸில் உள்ளது. அந்த வகையில் சந்திரயான் 3 விண்கலத்தின் இறுதி வேக குறைப்பு செயல்பாடு வெற்றி அடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இஸ்ரோ “இரண்டாவது மற்றும் இறுதி டீபூஸ்டிங் செயல்பாடு LM சுற்றுப்பாதையை 25 கிமீ x 134 கிமீக்கு வெற்றிகரமாக குறைத்துள்ளது. தொகுதி உள் சோதனைகளுக்கு உட்பட்டு, நியமிக்கப்பட்ட தரையிறங்கும் தளத்தில் சூரிய உதயத்திற்காக காத்திருக்கும். இயங்கும் இறங்குதல் ஆகஸ்ட் 23, 2023 அன்று சுமார் 1745 மணிநேரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments